Newsகுழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்

குழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்

-

உலகளவில் குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து யுனிசெப் எனப்படும், ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் குறித்து இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வெவ்வேறு பகுதிகளில் நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டன.

அப்போது, கொரோனா பெருந்தொற்று பரவலின் போது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதே சிறந்த முடிவாக பெற்றோர் கருத தொடங்கியது தெரியவந்தது.

சர்வதேச ரீதியாக குழந்தை திருமணம் செய்து கொண்ட சிறுமியர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெற்காசியாவில் தான். இங்கு, 29 கோடி சிறுமியருக்கு திருமணம் நடந்துள்ளது. இது உலகளவில் உள்ள சிறுமியரின் எண்ணிக்கையில் 45 சதவீதம் என்ற கணக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கையில் பெண்களின் திருமண வயது சட்டப்படி 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, நேபாளத்தில் 20 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 16 ஆக உள்ளது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...