Newsகுழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்

குழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்

-

உலகளவில் குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து யுனிசெப் எனப்படும், ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்கள் குறித்து இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வெவ்வேறு பகுதிகளில் நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டன.

அப்போது, கொரோனா பெருந்தொற்று பரவலின் போது அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதே சிறந்த முடிவாக பெற்றோர் கருத தொடங்கியது தெரியவந்தது.

சர்வதேச ரீதியாக குழந்தை திருமணம் செய்து கொண்ட சிறுமியர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெற்காசியாவில் தான். இங்கு, 29 கோடி சிறுமியருக்கு திருமணம் நடந்துள்ளது. இது உலகளவில் உள்ள சிறுமியரின் எண்ணிக்கையில் 45 சதவீதம் என்ற கணக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், இலங்கையில் பெண்களின் திருமண வயது சட்டப்படி 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, நேபாளத்தில் 20 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 16 ஆக உள்ளது.

Latest news

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

Toyota மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள்

ஆஸ்திரேலிய வாகனத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாபெரும் நிறுவனமாகத் திகழும் Toyota மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. Toyota...