Breaking Newsகோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்

-

மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6 ஆம் திகதி, லண்டனில் கோலாகலமாக நடைபெறுகின்றது.

இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றது.

இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கின்றது.

இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.

இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

ஆனாலும் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.

Latest news

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடுமையான வேலை வெட்டுக்கள்

டிரம்ப் நிர்வாகம் 1,000க்கும் மேற்பட்ட வெளியுறவுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன்படி, 1,107 அரசு ஊழியர்களும் 246 வெளிநாட்டு சேவை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின்...

தீங்கு விளைவிக்கும் பாசிகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரத்தில் பல்வேறு இடங்களில் தீங்கு விளைவிக்கும் பாசிகள் பூப்பது சுற்றுலாப் பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. Port River உட்பட கடற்கரையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்ட...

ஆசிய வர்த்தகத்தின் மீது திரும்பிய ஆஸ்திரேலியாவின் கவனம்

அமெரிக்காவின் வரி நெருக்கடி காரணமாக ஆசிய வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு நம்பகமான பங்காளியாக ஆஸ்திரேலியா இருக்க விரும்புவதாகவும், பொருளாதார உறவுகளை...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

வெட்டுக்கள் இல்லாமல் தோல் புற்றுநோயைக் கண்டறியும் இயந்திரம்

குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns skin clinic, AI மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவாத தோல் புற்றுநோய் கண்டறிதல் இயந்திரத்தை இறக்குமதி செய்துள்ளது. Deep Live என்று...

Toyota மீது வழக்கு தொடர்ந்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள்

ஆஸ்திரேலிய வாகனத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மாபெரும் நிறுவனமாகத் திகழும் Toyota மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய வழக்கறிஞர்கள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது. Toyota...