Breaking News"வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல"

“வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

-

இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களோ அல்லது திறமையான பணியாளர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொல்லையாக கருதப்படுவதில்லை என்றார்.

பல ஆண்டுகளாக குடிவரவு சட்டங்களில் உள்ள பலவீனங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதே தொழிலாளர் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...