Breaking News"வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல"

“வெளிநாட்டு மாணவர்கள் அல்லது திறமையான தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வருவது ஒரு பிரச்சனையல்ல”

-

இந்த நிதியாண்டுக்கு 04 இலட்சம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு வந்தாலும் அதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஒரு வருடத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கைக்கு இணையான குடியேற்றவாசிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் இருக்காது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு குடிவரவு சட்ட மாற்றத்தின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருவார்கள் எனவும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான திட்டம் மத்திய அரசிடம் இல்லை எனவும் லிபரல் எதிர்க்கட்சி கூட்டணி குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்குப் பதிலளித்த பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஆஸ்திரேலியாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களோ அல்லது திறமையான பணியாளர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொல்லையாக கருதப்படுவதில்லை என்றார்.

பல ஆண்டுகளாக குடிவரவு சட்டங்களில் உள்ள பலவீனங்களை ஒவ்வொன்றாக சரிசெய்வதே தொழிலாளர் அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...