Newsவிடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

விடுமுறைக்கு தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலியர் மர்ம மரணம்!

-

தாய்லாந்தில் சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியர் ஒருவர், அந்நாட்டு சிறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ விண்டர் (31) என்பவர், தனது முகத்தில் பச்சை குத்திக் கொள்வதற்காக ஐந்து நாள் பயணமாக தாய்லாந்தின் தீவான Phuketவிற்கு சென்றார்.

செவ்வாய்க்கிழமை அன்று நாடு திரும்ப இருந்த அவர், திங்கட்கிழமை அதிகாலையில் மது அருந்திவிட்டு தகராறு செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் படோங் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்பிற்கான காரணம் உடனடியாக அறியப்படவில்லை. எனினும் விண்டரின் மரணத்திற்கான காரணத்தைக் காட்டும் சிசிடிவி காட்சி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், அவை இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

பிரேத பரிசோதனைக்காக விண்டரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தாய்லாந்து பொலிஸார் அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...