Sportsராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

-

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றை 2வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 138 ஓட்டங்களை சேர்த்தது.

இருவரும் ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜோஸ் பட்லர் 59 பந்தில் 95 ஓட்டத்தில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 66 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 215 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

இதில், அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்ந்து, ராகுல் திரிபாதி 47 ஓட்டங்களும், அன்மோல்ப்ரீத் சிங் 33 ஓட்டம், ஹெயின்ரிச் கிளாசன் 26 ஓட்டங்களும், கிளென் பிலிப்ஸ் 25 ஓட்டங்களும், அப்துல் சமாத் 11 ஓட்டங்களும், எய்டன் மார்க்ரம் 6 ஓட்டங்களும், மார்கோ ஜான்சன் 3 ஓட்டங்களும் எடுத்தனர்.

அப்துல் சமான் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் அவுட்டாகாமல் விளையாடினர்.

இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுத்து ஐதராபாத் அணி அசத்தலாக வெற்றிப்பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கருத்தடைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்

பிரபலமான கருத்தடைகளுக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஹார்மோன் கருப்பையக சாதனங்கள் அல்லது ஐயுடி எனப்படும்...

வீட்டில் $2000 சேமிக்க விக்டோரியர்களுக்கு ஒரு வழி

எரிவாயுவில் இருந்து மின்சார சாதனங்களுக்கு மாறினால், விக்டோரியர்களுக்கு ஆண்டுக்கு $2,000 சேமிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எரிவாயு குழாய் ஏர் கண்டிஷனர்களுக்குப் பதிலாக மின்சார...

டிஜிட்டல் மயமாவதால் ஆயிரக்கணக்கான ATMகளை இழக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா டிஜிட்டல் சமூகமாக மாறியதன் காரணமாக, 5 ஆண்டுகளில் சுமார் 6000 ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200...

ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்க ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை...

டிஜிட்டல் மயமாவதால் ஆயிரக்கணக்கான ATMகளை இழக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா டிஜிட்டல் சமூகமாக மாறியதன் காரணமாக, 5 ஆண்டுகளில் சுமார் 6000 ATM இயந்திரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் கடந்த நிதியாண்டில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 200...

ஆஸ்திரேலியாவில் பிறப்பு விகிதத்தை குறைக்க ஒரு தம்பதியினருக்கு 3 குழந்தைகளாவது இருக்க வேண்டும்

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 286,998 ஆகவும், இது 2022 ஆம் ஆண்டை...