Sportsகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ்...

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் – IPL 2023

-

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 103 ஓட்டங்கள் விளாசினார்.

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை சரித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் (6) மற்றும் சஹா (2) ஆகியோரை ஆகாஷ் தனது மிரட்டலான பந்துவீச்சில் வெளியேற்றினார்.

பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். தமிழக வீரர் விஜய் சங்கர் தனது பங்குக்கு 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த டேவிட் மில்லரை 41 ஓட்டங்களில் ஆகாஷ் ஆட்டமிழக்க செய்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் ரஷீத் கான் வாணவேடிக்கை காட்டினார்.

இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...