Newsடைட்டானிக் கப்பல் குறித்த மர்மங்களுக்கு தீர்வு கிடைத்தது!

டைட்டானிக் கப்பல் குறித்த மர்மங்களுக்கு தீர்வு கிடைத்தது!

-

அட்லாண்டிக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் 3னு ஸ்கேன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக்கின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேனை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்கேன் மூலமாக டைட்டானிக் கப்பலின், சிதைவுகளை விரிவாகவும், தெளிவாகவும் பார்க்க முடிகிறது.

இரண்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த ஆறு வாரங்களாக வடக்கு அட்லாண்டிக் கடலில் இந்த ஆய்வை மேற்கொண்டு, இதனை வெளியிட்டுள்ளனர்.

ஏப்ரல் 15 ஆம் திகதி 1912 அன்று, டைட்டானிக் கப்பலானது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

இதன்போது வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சொகுசு கடல் கப்பல் சில மணிநேரங்களில் மூழ்கி சுமார் 1,500 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்தது.

டைட்டானிக்கின் முந்தைய படங்கள் பெரும்பாலும் குறைந்த ஒளி அளவுகளால் மட்டுப்படுத்தப்பட்டதாகவும், பார்வையாளர்கள் ஒரு நேரத்தில் சிதைவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க அனுமதித்ததாகவும் காணப்பட்ட நிலையில், தற்போதைய 3D ஸ்கேனிங் மூலம் தெளிவாகவும், துள்ளியமாகவும் பார்க்க முடிகிறது.

Latest news

Augathellaவின் நீர் விநியோக இடமான Charleville-ல் மூளையை உண்ணும் ஆபத்தான அமீபா கண்டுபிடிப்பு

தென்மேற்கு குயின்ஸ்லாந்து ஷையரின் குடிநீர் விநியோக நிலையத்தில் மூளையை உண்ணும் ஒரு அரிய மற்றும் ஆபத்தான அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Charleville மற்றும் Augathella-இற்கான குடிநீரில் Naegleria fowleri என்ற...

உணவுப் பொட்டலத்தில் எடையுடன் கூடிய e எழுத்து என்ன?

உணவுப் பொட்டலத்தில் உள்ள "e" சின்னம் (250 கிராம் e) அதன் எடையுடன் சேர்த்து, கேள்விக்குரிய பொருள் சரியான எடையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது என்று...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

தரவு பாதுகாப்பிற்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் பிரபல வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று, அதிகரித்து வரும் வங்கி மோசடிகளை எதிர்த்துப் போராட AI ஐப் பயன்படுத்தி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் வங்கி...

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...