Sportsஒரு ஓட்ட வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி - IPL...

ஒரு ஓட்ட வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடரில் 68-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோதின. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி கொல்கத்தா அணியினரின் அபார பந்துவீச்சில் லக்னோ சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் 73 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனியுடன், நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பதோனி 25 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 58 ஓட்டத்தில் வெளியேறினார். இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா சார்பில் ஷர்துல் தாக்குர், வைபவ் அரோரா, சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

இதில், அதிகபட்சமாக அரை சதம் அடித்த ரிங்கு சிங் 67 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் விளையாடினார். தொடர்ந்து, ஜாசன் ராய் 45 ஓட்டங்கள், வெங்கடேஷ் ஐயர் 24 ஓட்டங்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 8 ஓட்டங்களும், ஆண்டிரே ரூசல் 7 ஓட்டங்களும், ஷார்துல் தகூர் 3 ஓட்டங்களும், சுனில் நரைன் ஒரு ஓட்டமும் எடுத்தனர். 

இறுதியாக களமிறங்கிய வைபவ் அரோரா ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். ஆட்டத்தின் முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிப் பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...