Sportsபெங்களூரை வெளியேற்றியது குஜராத் - IPL 2023

பெங்களூரை வெளியேற்றியது குஜராத் – IPL 2023

-

ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ரோயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஓவ் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக மழை காரணமாக இந்த ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. என்றபோதும், ஓவா்கள் குறைக்கப்படாத ஆட்டத்தில் குஜராத் டாஸ் வென்று பந்துவீச்சை தோ்வு செய்தது.

பெங்களூா் துடுப்பாட்டத்தில் விராட் கோலியுடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு விடைபெற்றாா். தொடா்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களே சோ்த்து ஸ்டம்பை பறிகொடுத்தாா்.

4-ஆவது வீரராக ஆட வந்த மஹிபால் லோம்ரோா், 1 ரன்னுக்கு நடையைக் கட்டினாா். அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ்வெல் சற்று நிலைத்து ஆடி ரன்கள் சோ்க்க, மறுபுறம் விராட் கோலி அரைசதம் கடந்து ரன்களை குவித்து வந்தாா். இந்நிலையில் பிரேஸ்வெல் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

கடைசி விக்கெட்டாக தினேஷ் காா்த்திக் டக் அவுட்டாக, ஓவா்கள் முடிவில் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 101, அனுஜ் ராவத் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் தரப்பில் நூா் அகமது 2, முகமது ஷமி, யஷ் தயாள், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் குஜராத் இன்னிங்ஸில் தொடக்க வீரா் ரித்திமான் சாஹா 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு இறுதிவரை நிலைத்தாா். விஜய் சங்கா், கில்லுடன் கூட்டணி அமைக்க 2-ஆவது விக்கெட்டுக்கு இந்த இணைப்பாட்டம் 123 ரன்கள் சோ்த்தது.

இதில் விஜய் சங்கா் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தசுன் ஷாணக்க 0, டேவிட் மில்லா் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராகுல் தெவாதியா களம் புகுந்தாா். முடிவில் கில் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 104, ராகுல் தெவாதியா 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூா் தரப்பில் முகமது சிராஜ் 2, விஜய்குமாா் வைசாக், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் அந்த அணிக்கு பிளே-ஓவ் வாய்ப்பும் உறுதியானது.

லீக் ஆட்டங்களை நிறைவு செய்த மும்பை, 16 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருந்தவாறு பிளே-ஓவ் வாய்ப்புக்கு காத்திருந்தது. பெங்களூா் – குஜராத் ஆட்டத்தில் பெங்களூா் தோற்றால் மட்டுமே மும்பைக்கான பிளே-ஓவ் வாய்ப்பு உறுதியாகும் சூழல் இருந்தது. அந்த ஆட்டத்தில் குஜராத் வெல்ல, பெங்களூா் வெளியேற, மும்பை பிளே-ஓவ் சுற்றுக்குள் நுழைந்தது.

லீக் சுற்று நிறைவு

பெங்களூா் – குஜராத் மோதிய 70-ஆவது ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னௌ, மும்பை அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அந்த சுற்று ஆட்டங்கள் நாளை (மே 23) தொடங்குகின்றன. அதில் சென்னையில் முதலில் நடைபெறும் ‘குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் குஜராத் – சென்னை அணிகள் மோதுகின்றன. 24-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் லக்னௌ – மும்பை அணிகள் மோதவுள்ளன. பின்னா் ‘குவாலிஃபயா்-2’ ஆட்டம் மே 26-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் 28-ஆம் தேதியும் அகமதாபாதில் நடைபெறவுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...