Newsஇந்தியாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 207 பேர் உயிரிழப்பு - 900...

இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் 207 பேர் உயிரிழப்பு – 900 பேர் காயம்

-

இந்தியாவில் மூன்று ரயில்கள் மோதியதில் 207 பேர் இறந்தனர் மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஒடிசா மாநிலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் தடம் புரண்டதால், அதன் சில பெட்டிகள் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மோதியது.

மேலும் மற்றொரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இந்த ரயில் விபத்து கருதப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...