Newsஇலங்கையிலிருந்து வெற்றிலை & வாழைப்பழங்களை கொண்டு வந்த நபருக்கு சிட்னி விமான...

இலங்கையிலிருந்து வெற்றிலை & வாழைப்பழங்களை கொண்டு வந்த நபருக்கு சிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி

-

வெற்றிலை, வாழைப்பழம், மாவு உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தனது சூட்கேஸில் கொண்டு வந்த நபருக்கு 5,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் மே 16 ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள புதிய உயிரி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவ்வளவு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்னுக்கு வந்த 3 விமானப் பயணிகளும் தாவர உதிரிபாகங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த 4 பயணிகளுக்கும் மொத்தமாக 22,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன, அதன் படி, தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருபவர்கள் அல்லது கொண்டு வரப்பட்ட பொருட்களை அறிவிக்காதவர்களுக்கு $5,500 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...