Newsரஷ்யாவின் புதிய அறிவிப்பு - பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகின்றதா?

ரஷ்யாவின் புதிய அறிவிப்பு – பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகின்றதா?

-

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ஜனாதிபதியுடன், ரஷ்யா ஜனாதிபதி ஆலோசனை நடத்தினார்.

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷ்ய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என ரஷ்யா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி பேரலைகள், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், உலகையே ஆட்டி படைத்த கொரோனா என அனைத்தும் பலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால் அணு ஆயுத விஷயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Palen Creek-இல் காரைத் திருடி மோதியதாகக் கூறி தப்பியோடிய கைதி கைது

கடந்த மாதம் பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு கைதி, நேற்று காலை திருடப்பட்டதாகக் கூறப்படும் காரை மோதிய பின்னர் பிடிபட்டார். மே 27 அன்று...

குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பணமோசடி கும்பல் – 21 மில்லியன் டாலர்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து காவல்துறை பணமோசடி கும்பல் தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் தங்கள் துணையை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25%...

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...