Newsபிரதமர் மோடி-எலான் மஸ்க் இடையே சந்திப்பு

பிரதமர் மோடி-எலான் மஸ்க் இடையே சந்திப்பு

-

அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார். அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.இந்த விஜயத்தின் போது நியூயோர்க்கில் பிரதமர் மோடி பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து எலான் மஸ்க் தெரிவிக்கையில்,

‘இந்தியாவின் எதிர்காலம் பற்றி நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமாக உள்ளேன். பிரதமர் மோடி இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய எங்களைத் தூண்டுவதால், இந்தியா மீது உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். நான் மோடியின் ரசிகன். இது ஒரு அருமையான சந்திப்பு. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.

அவர் (பிரதமர் மோடி) இந்தியாவிற்கு சரியான விஷயங்களைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் கூற முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும் அது இந்தியாவின் சாதகமாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல நான் தற்காலிகமாகத் திட்டமிட்டுள்ளேன். ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கும் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்டார்லிங்க் இணையம், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு நம்பமுடியாத அளவிற்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...