Newsஅமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி

-

உலகம் முழுவதும் இறைச்சியை உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது.

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றது.

விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2-வது நாடு அமெரிக்கா ஆகும். ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஈட் ஜஸ்ட் நிறுவனம், சிங்கப்பூரில் செற்கை இறைச்சியை விற்கிறது. விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது.

கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் தெரிவிக்கையில் ,

‘அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் வழங்கி இருப்பது இறைச்சியை நமது மேசையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று’ என தெரிவித்துள்ளார்.

Latest news

HIV சிகிச்சையில் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் ஒரு அரிய கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு ஒன்று, HIV சிகிச்சையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வழிமுறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. HIV பாதிப்புக்குள்ளானவர்களின் உடலுக்குள் காணப்படும் சில வெள்ளை அணுக்களுக்குள் இந்த...

WA இல் பொது விடுமுறை நாட்கள் மாற்றப்படலாம் – பிரதமர் Roger Cook

மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை...

ஆஸ்திரிய பள்ளி துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி உட்பட 10 பேர் பலி

தென்கிழக்கு ஆஸ்திரிய நகரமான Graz-இல் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆஸ்திரிய...

சிறுமிகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த விக்டோரியன் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தண்டனை

விக்டோரியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியருக்கு, குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 66 வயதான Peter Jeffrey Farmer என்ற ஆசிரியர், Gippsland-இல்...

சிட்னி செல்லும் விமானத்தில் குடிபோதையில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கிய பெண்

சிட்னிக்கு சர்வதேச விமானத்தில் பயணித்த ஒரு பெண், தான் எடுத்துச் சென்ற மது பாட்டிலை முழுவதுமாகக் குடித்த பிறகு, விமானக் குழு உறுப்பினரை ஆக்ரோஷமாகத் தாக்கியதாகக்...

WA இல் பொது விடுமுறை நாட்கள் மாற்றப்படலாம் – பிரதமர் Roger Cook

மேற்கு ஆஸ்திரேலியா (WA) மக்களுக்கு கூடுதல் பொது விடுமுறை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, கிழக்கு கடற்கரையில் அரசு விடுமுறை முறையுடன் தன்னை...