Sportsகின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ

கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ

-

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை ஜெர்மனில் இடம்பெறவுள்ளது.

இதற்கான தகுதி சுற்று போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார்.

அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் ஆவார்.

போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

123- வது கோல் இந்த போட்டியில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.

89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார். தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.

அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...

முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் பிரிஸ்பேர்ண் Story Bridge

பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக்...

குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியை இழப்பாரா?

குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி லிபரல் கட்சி வெற்றி பெற்று...

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோருக்கு 5 நிலைகளில் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியைத் திட்டமிடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கல்வி அமைச்சு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நாட்டில் கல்வி கற்க 5 படி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புத்...