Newsவாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

-

நாட்டிலேயே முதல் முறையாக வாடகைத் தாய் முறையில் கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் ஓங்கோல் பசு ஒன்று வாடகைத்தாய் போன்ற முறையில் சாகிவால் நாட்டு இனத்தை சேர்ந்த கிடாரி கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. அதற்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து அதிக பால் உற்பத்தி கொடுக்கும் நாட்டு பசுக்கள் பலவற்றை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இது போல் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாக உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர்ரக சாகிவால் கிடாரி கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 10 பசுக்கள் சாகிவால் இனத்தைச் சேர்ந்த கிடாரி கன்றுகளை ஈன்றெடுக்க உள்ளன.

தேவஸ்தானத்தின் கோசாலையில் தினமும் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யவும், 60 கிலோ உயர்ரக நாட்டு பசு வெண்ணை தயார் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜகவர் ரெட்டி ஆலோசனையின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...