Sportsமுதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

-

13-வது உலக கிண்ண கிரிக்கெட் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கிண்ண கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கிண்ண போட்டியில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் உலக கிண்ண போட்டியை பிரபலப்படுத்த ICC புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அது என்னவென்றால் உலக கிண்ண டிராபியை பிரத்யேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 இலட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கிண்ணம் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கிண்ணம் வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்.

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கிண்ணம் என்ற பெருமையை ICC ஒருநாள் உலக கிண்ணம் பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...