Newsஅடுத்த மாதம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள...

அடுத்த மாதம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பம்!

-

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படும் வசதிகளுக்கு அமைய பலாலி விமான நிலையத்தில் 72 பயணிகள் பயணிக்க கூடிய விமானங்களை மாத்திரமே தரையிறக்க முடியும்.

இதனை அதிகரிப்பதற்காக இந்தியாவிடம் இருந்து நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிக பயணிகள் பயணிக்க கூடிய விமானங்களை பலாலி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நன்றி – தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் புதிய வீடுகளின் தேவை 1.2 மில்லியனாக இருக்கும் என ஆய்வு

2029 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் புதிய வீடுகளின் தேவை சுமார் 1.2 மில்லியனாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய வீட்டு வசதி கவுன்சில் சமீபத்தில்...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...

வியட்நாமில் உணவு விஷமானதால் 500 பேர் மருத்துவமனையில் அனுமதி

தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் பான் மியை சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு...

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...

துப்பாக்கிச் சூடு காரணமாக மெல்போர்னில் மூடப்பட்டுள்ள முக்கிய சாலை

துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, மெல்போர்னில் உள்ள பிரதான வீதியொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிரீன்ஸ்பரோவில் இருந்து பாஸ்கோ வேல் சாலையை நோக்கி M80 ரிங் ரோடு வெளியேறும் மற்றும்...