Newsசட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப்...

சட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப் பெண்

-

தெற்கு ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தின் voluntary assisted dying laws- துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்துறந்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான Lily Thai என்ற பெண், Ehlers-Danlos Syndrome, Autoimmune autonomic ganglionopathy போன்ற குணப்படுத்த முடியாத நோய்நிலைமைகளின் காரணமாக தனது வாழ்நாளின் பல வருடங்களை வலியுடன் கழித்திருந்த பின்னணியில், துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் அதாவது கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை உயிர்துறந்தார்.

இனிமேலும் வலியைப் பொறுக்கமுடியாது என்பதால் தெற்கு ஆஸ்திரேலியாவின் கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், நோயினால் தான் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்திருந்தார்.

தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றபோதிலும், எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இதுவெனவும், தான் அமைதியாக இறக்க வேண்டும் என்பதே தனது தெரிவு எனவும் அவர் கூறினார்.

Lily Thai, நடப்பது சாப்பிடுவது உட்பட எந்தவொரு செயலையும் தானாகச் செய்ய முடியாதநிலையில், மற்றவர்களை நம்பியே வாழ வேண்டியிருந்ததாகவும், 17 வயதிலிருந்து கடந்த 6 வருடங்களாக அதிகளவான நாட்களை மருத்துவமனையிலேயே கழித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Latest news

சவுதி அரேபியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டிடம்

சவுதி அரேபியாவில் 50 பில்லியன் டொலர் மதிப்பில் 'முகாப்” என்ற திட்டமான உலகின் மிகப்பெரிய பிரமாண்டமான கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியாத்தில் அமையவுள்ள இத்திட்டமானது...

ஒன்றே குலம் ஒருவனே தேவன் – தவெக இன் தலைவர் விஜய்

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா?...

ஆஸ்திரேலியா வருபவர்கள் இனி இந்த தொலைபேசிகளை கொண்டுவர வேண்டாம்

ஆஸ்திரேலியாவிற்கு இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு வருவதற்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவல்கள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியாவில் 3G சேவைகள் முற்றாக...

கைதிகளால் நிரம்பி வழியும் ஆஸ்திரேலிய மாநில சிறைகள்

அதிக எண்ணிக்கையிலான கைதிகளை அவசர திட்டத்தின் கீழ் மாற்றுவதற்கு வடமாகாண அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அப்பகுதியில் வேகமாக அதிகரித்து வரும் சிறைவாசிகளின் எண்ணிக்கையால் ஏற்படும் அபாயங்களைக் கையாள்வதற்காகவே இந்த...

டிக்கெட் மோசடிகளில் சிக்க வேண்டாம் என ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் டிக்கெட் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முக்கிய...

குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதவியேற்பு

சிறிது நேரத்திற்கு முன்பு, குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் புதிய மாநில முதல்வராக David Crisafulli பதவியேற்றார். அதன்படி, குயின்ஸ்லாந்தின் 41வது பிரதமராக David Crisafulli பதிவுகளில் இணைகிறார். மாநிலத்தின்...