Newsஅமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

-

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (வயது 49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சவாரிக்கான உபேர் செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவிற்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது. சுமார் 4 ஆண்டுகாலமாக இது இடம்பெற்று வந்துள்ளதாக அறியப்படுகின்றது.

கலிபோர்னியாவில் உள்ள ஜஸ்பால் கில்லின் வீட்டில் சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள், அங்கிருந்து 45 ஆயிரம் டொலர் ரொக்கம், போலியான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ஜஸ்பால் கில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, ஜஸ்பால் கில்லுக்கு 45 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ஜஸ்பால் கில்லும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தான் வசித்து வந்துள்ளார்.

எனவே ,அவர் சிறை தண்டனைக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...