Newsநியூயோர்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம்

நியூயோர்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம்

-

அமெரிக்காவின் நியூயோர்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது.

சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன.

நியூயோர்க் நகர சுரங்கப்பாதைகளிலும் இந்த பூச்சிகள் கூட்டம் ஊடுருவியுள்ளது. இது குறித்து சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், ‘இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- – ஒருவகை கொசு) அல்ல’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டொக்டர் கோரி மோரோ தெரிவித்துள்ளார்.

இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று நியூயோர்க் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம் நியூயோர்க் நகர சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

மெல்பேர்ணில் காணாமல் போன குழந்தை

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...