NoticesTamil Community Eventsஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

-

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஐயமிட்டுன் அமைப்பின ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களின் எண்ணக்கருவில், மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலய தர்மகர்த்தா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியில், மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை மாவட்டத்தின் மூன்றாவது மற்றும் மாத்தளை ஆலய கட்டமைப்புக்குள் முதலாவது மின்வழிக்கற்கை நிலையம் (Digital Education Centre) கடந்த 03/07/2023 ஆம் திகதி மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் மாணவர்களின் சமய கற்கை மட்டுமன்றி கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில கற்கை தேர்ச்சியையும் இந்த மின்வழிக்கற்கை உறுதி செய்யும். இது மின்வழிக்கற்கை நிலையமாக மாத்திரம் அல்லாமல் விழுமியங்கள் மற்றும் தொழில் கற்கைகளை வழங்கும் கேந்திர நிலையமாகவும் செயற்படவுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் புதிய பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு SMART பாலர் பாடசாலையாக அமையவுள்ளது.

இந்த நிலையத்தின் தொழில்நுட்ப, கண்காணிப்பு, முகாமைத்துவ மற்றும் அறிவு வள தேவைகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிகழ்வில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக தலைமை ஆலோசகர் Dr. சுமணேந்திரன், இயக்குனர் திரு. ரவிசங்கர் மற்றும் ஆலோசகர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள், அங்கத்தவர்கள் திரு. நிரோஷன் மற்றும் திரு. ரிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...