NoticesTamil Community Eventsஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

-

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஐயமிட்டுன் அமைப்பின ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களின் எண்ணக்கருவில், மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலய தர்மகர்த்தா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியில், மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை மாவட்டத்தின் மூன்றாவது மற்றும் மாத்தளை ஆலய கட்டமைப்புக்குள் முதலாவது மின்வழிக்கற்கை நிலையம் (Digital Education Centre) கடந்த 03/07/2023 ஆம் திகதி மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் மாணவர்களின் சமய கற்கை மட்டுமன்றி கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில கற்கை தேர்ச்சியையும் இந்த மின்வழிக்கற்கை உறுதி செய்யும். இது மின்வழிக்கற்கை நிலையமாக மாத்திரம் அல்லாமல் விழுமியங்கள் மற்றும் தொழில் கற்கைகளை வழங்கும் கேந்திர நிலையமாகவும் செயற்படவுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் புதிய பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு SMART பாலர் பாடசாலையாக அமையவுள்ளது.

இந்த நிலையத்தின் தொழில்நுட்ப, கண்காணிப்பு, முகாமைத்துவ மற்றும் அறிவு வள தேவைகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிகழ்வில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக தலைமை ஆலோசகர் Dr. சுமணேந்திரன், இயக்குனர் திரு. ரவிசங்கர் மற்றும் ஆலோசகர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள், அங்கத்தவர்கள் திரு. நிரோஷன் மற்றும் திரு. ரிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...