Newsமனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

மனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் AI ரோபோக்கள்

-

மனிதர்களை விட உலகை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஐநாவின் உச்சிமாநாட்டில் AI ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு” உச்சி மாநாடு ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3000 நபர்கள் இதில் கலந்து கொண்டு AI தொழில்நுட்பத்தை எவ்வாறு கடிவாளமிட்டு, அவற்றை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த உச்சிமாநாட்டில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகமே உற்று நோக்கிய இந்த உச்சிமாநாட்டில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அறையில் நிலவிய நிசப்தத்தை ஆராய்ந்த ரோபோ ஒன்று, என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம் என்று கூறியது.

இந்த AI ரோபோக்களின் முதல் பத்தரிக்கையாளர் சந்திப்பில், ஹியூமனாய்ட் ரோபோகளை பார்த்து நீங்கள் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால், மிகுந்த செயல்திறனுடன் நிச்சயமாக சிறந்த தலைவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தது.

மேலும் மற்றொரு ரோபோ பேசிய போது, எங்களுக்கு மனிதர்களை போல உணர்வுகள் இல்லை, அதனால் சில நேரங்களில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் குறுகிய காலத்தில் தரவுகளை உள்வாங்கி எங்களால் சிறப்பான முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமோகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதற்கு முக்கிய காரணம் மிகத் துல்லியமான மனித உருவ சாயலை ஒத்துருந்தது தான்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமோகா, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சியை கண்டு உற்சாகமடையும் நேரத்தில், அதனை உருவாக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ நாங்கள் நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை திருட மாட்டோம் அதே சமயம் மனிதர்களுக்கு எதிராக போராடவும் மாட்டோம் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என ஒப்புக் கொண்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...