Cinemaகதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

கதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

-

தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

22 வயதாகும் சஞ்சய், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் திரைப்பட கலையை பயின்று வருகிறார்.

விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசந்த முல்லை’ பாடல் பலருக்கும் பிடிக்கும். இந்த பாடலில் சிறு பிள்ளையாக அறிமுகமாகியிருந்தார் விஜய்யின் மகன் சஞ்சய். 7 வயது குழந்தையாக இந்த பாடலில் தோன்றிய இவரை பலருக்கும் பிடித்து போனது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் அப்பாவுடன் நடனமாடி கலக்கினார் சஞ்சய். இதையடுத்து அவரை எந்த படத்திலும் காணவில்லை.

திரைப்பட கலை பயின்று வரும் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆயத்த பணிகளில்தான் சஞ்சய் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சஞ்சய் அவ்வப்போது குறும்படங்களை எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளாராம். பிற வாரிசு நடிகர்களை போலவே விஜய்யின் மகனும் சினிமாவிற்கு வந்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை தன் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக பிரபல இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம், ‘நீ வருவாய் என’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ராஜகுமாரன். நடிகை தேவயானியும் இவரும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரான் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவர், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும் அதில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜகுமாரன்-தேவயானி தம்பதியருக்கு பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் இனியா குமாரான் என்ற இரண்டு மகள்கள் உள்ளார். விஜய் மகன் ஹீரோவாக நடித்தால் தன் மகளை அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என ராஜகுமாரன் ஒரு நேர்காணலில் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். மகள்களுக்கும் சினிமா மீது ஆசை உள்ளதாகவும் விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கினால் அதில் தன் மகள்களை நடிக்க வைக்கலாமா என ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...