Cinemaகதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

கதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

-

தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

22 வயதாகும் சஞ்சய், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான கல்லூரியில் திரைப்பட கலையை பயின்று வருகிறார்.

விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான ‘போக்கிரி படத்தில் இடம் பெற்றுள்ள ‘வசந்த முல்லை’ பாடல் பலருக்கும் பிடிக்கும். இந்த பாடலில் சிறு பிள்ளையாக அறிமுகமாகியிருந்தார் விஜய்யின் மகன் சஞ்சய். 7 வயது குழந்தையாக இந்த பாடலில் தோன்றிய இவரை பலருக்கும் பிடித்து போனது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் அப்பாவுடன் நடனமாடி கலக்கினார் சஞ்சய். இதையடுத்து அவரை எந்த படத்திலும் காணவில்லை.

திரைப்பட கலை பயின்று வரும் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆயத்த பணிகளில்தான் சஞ்சய் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சஞ்சய் அவ்வப்போது குறும்படங்களை எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளாராம். பிற வாரிசு நடிகர்களை போலவே விஜய்யின் மகனும் சினிமாவிற்கு வந்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரை தன் படம் ஒன்றில் நாயகனாக நடிக்க வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக பிரபல இயக்குநர் ஒருவர் கூறியிருக்கிறார்.

1999ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்த படம், ‘நீ வருவாய் என’. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ராஜகுமாரன். நடிகை தேவயானியும் இவரும் காதலித்து 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரான் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இவர், நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும் அதில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ராஜகுமாரன்-தேவயானி தம்பதியருக்கு பிரியங்கா ராஜகுமாரன் மற்றும் இனியா குமாரான் என்ற இரண்டு மகள்கள் உள்ளார். விஜய் மகன் ஹீரோவாக நடித்தால் தன் மகளை அதில் கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என ராஜகுமாரன் ஒரு நேர்காணலில் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார். மகள்களுக்கும் சினிமா மீது ஆசை உள்ளதாகவும் விஜய்யின் மகனை வைத்து படம் இயக்கினால் அதில் தன் மகள்களை நடிக்க வைக்கலாமா என ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...