News70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

-

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. இனி மன்னர் பெயரால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளன.

1952ஆம் ஆண்டு வரை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் அரசாண்டதால், பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட்டுவந்தன.

அவர் மரணமடைந்ததும் ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்க, அப்போதிலிருந்து சுமார் 70 ஆண்டுகளாக, மகாராணியார் பெயரில்தான் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது தன் தாயாரின் மறைவைத் தொடர்ந்து சார்லஸ் மன்னராகியுள்ளதால், மீண்டும் பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட உள்ளன.

பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் ’Her Majesty’ என்னும் வார்த்தைகளுக்கு பதிலாக இனி ‘His Majesty’ என்னும் வார்த்தைகள் இடம்பிடிக்கும்.
ஆனால், மன்னர் சார்லசுக்கு பாஸ்போர்ட் கிடையாதாம். பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது.

ஆகவே, மன்னர் சார்லஸ் வெளிநாடு செல்லும்போது அவர் பாஸ்போர்ட் இல்லாமலே பயணிப்பார்.

புதிய பாஸ்போர்ட்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்கள் தீர்ந்துபோன பிறகே புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், மன்னர் சார்லசுக்கு எதையும் வீணாக்குவது பிடிக்காது.

மேலும், மன்னர் பெயரால் பாஸ்போர்ட்கள் வழங்கப்படப்போகின்றன என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு வீட்டுவசதித் துறையை எவ்வாறு பாதிக்கும்?

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வட்டி விகிதக் குறைப்பு, வீட்டுவசதி கட்டுமானத் துறையில் "அதிக நம்பிக்கையை" ஏற்படுத்தியுள்ளது என்று வீட்டுவசதி தொழில் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசலின்...

டிரம்பை எதிர்க்க புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க்

கோடீஸ்வரர் எலோன் மஸ்க் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார். தனது சமூக ஊடக தளமான X இல் ஒரு அறிவிப்பில், அவர் அமெரிக்க கட்சியை உருவாக்கியுள்ளதாகவும்,...

குயின்ஸ்லாந்தில் வீதியில் தீப்பிடித்து எரிந்த இரசாயன லாரி

குயின்ஸ்லாந்தில் ரசாயனங்கள் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Charleville-இற்கு தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Bakers Bend-இல்...

ஆஸ்திரேலியா சுதந்திரமாக இருக்க வேண்டும் – அல்பானீஸ் வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியா அமெரிக்காவிலிருந்து பிரிந்து சுதந்திரம் பெற முயற்சிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது உரையில் தெளிவுபடுத்தியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நேற்று சிட்னியில் ஒரு முக்கிய...