Newsகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை - துயர சம்பவம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை – துயர சம்பவம்

-

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சுதாகரன் 36. இவரது மனைவி – தாரணி காமாட்சி 25. இவர்களுக்கு 3 வயதில் ஹர்சித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தச்சு வேலை செய்த சுதாகரன், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியிலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாலை இறந்தார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த மனைவி தாரணி காமாட்சி வேதனை அடைந்தார். மனமுடைந்தவர் இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

போலியான மருத்துவ விடுப்பு காரணமாக பில்லியன் கணக்கான டாலர்களை இழக்கும் ஆஸ்திரேலியர்கள்

பத்து ஆஸ்திரேலியர்களில் ஏழு பேர் போலியான மருத்துவ விடுப்பு எடுக்கும் பழக்கத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, 68 சதவீத ஆஸ்திரேலியர்கள் போலியான மருத்துவ விடுப்பு...

2025 மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள்

2025 ஆம் ஆண்டுக்கான மன்னரின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் முன்னாள் பிரதமர் Scott Morrison-இற்கு மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து தவிர,...

Mount Hotham பகுதியில் பல மணி நேரம் சிக்கிய 20 பேர் மீட்பு

விக்டோரியாவின் Mount Hotham-இல் மணிக்கணக்கில் கார்களுக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குழு மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் Hotham Heights பகுதியில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு...

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

மெல்பேர்ணில் Airpods மூலம் கண்டுபிடிக்கப்பட்ட திருடப்பட்ட கார்

மெல்பேர்ணைச் சேர்ந்த Kosta Theos என்ற நபருக்குச் சொந்தமான V8 கார், Sunshine மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது திருடப்பட்டது. மருத்துவமனையில் இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு குடும்ப...