Newsஅமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

அமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

-

அமெரிக்க கடற்படையின் தளபதியாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மற்றும் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார். அவரையே கடற்படைத்தளபதியாக நியமிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த நியமனம் அந்நாட்டு செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. செனட் இந்த நியமனத்திற்கு அனுமதி அளித்தால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த அட்மிரல் லிசா ஃபன்செட்டி அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தளபதியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

“தனது வாழ்க்கை முழுவதும், அட்மிரல் ஃபிரான்செட்டி செயல்பாட்டு மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் விரிவான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படையின் தற்போதைய தளபதியான அட்மிரல் சாமுவேல் பாப்பரோவை கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிபர் பைடனுக்கு பரிந்துரைத்திருந்தார்.

Latest news

விக்டோரியர்களுக்கு வசதியான சுகாதார சேவைகளுக்கான திட்டங்கள்

விக்டோரியா மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, Community Health First  அரசாங்கத்திற்கு $75 மில்லியன் முதலீட்டை முன்மொழிந்துள்ளது . பொதுமக்களுக்கு மலிவு விலையில் அதிக மதிப்பு...

Work From Home-ஐ சட்டப்பூர்வமாக்க விக்டோரியன் அரசு தயார்

விக்டோரியா மாநில அரசு புதிய சட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வமாக்க தயாராகி வருவதாக பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார் . அதன்படி, விக்டோரியாவில்...

லொஸ் ஏஞ்சல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான கலிபோர்னியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள செவ்ரான் எல் செகுண்டோ சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா ஆளுநரின்...

மெல்பேர்ணில் நீரில் மூழ்கக்கூடிய பகுதிகளைக் காட்டும் புதிய வரைபடம்

மெல்பேர்ணின் உள் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மெல்பேர்ண் வாட்டர் இன்று வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட வெள்ள வரைபடம், நூறு...

வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நாட்டைப் பாதுகாப்போம் – அரசாங்கம்

ஆஸ்திரேலியாவை பாதுகாப்பான நாடாக மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருவதாகக் கூறுகிறது. நமது நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தேசிய நலன்களுக்கு வெளிநாட்டு தலையீட்டால் ஏற்படும் அச்சுறுத்தல்கள்...

ஆஸ்திரேலியாவைத் தாக்க இருக்கும் புயல்களுக்கான கவர்ச்சிகரமான பெயர் பட்டியல்

ஆஸ்திரேலியாவின் அடுத்த வெப்பமண்டல புயல்களுக்கான புதிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நவம்பர் முதல் ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் புயல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக...