Newsதென் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 2000 பென்குவின்கள்

தென் அமெரிக்காவில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 2000 பென்குவின்கள்

-

தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க என்ன காரணம் என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கரை ஒதுங்கிய பென்குவின்களுக்கு இன்புலுயென்சா காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரை ஒதுங்கிய பென்குவின்கள் அனைத்தும் இளம் வயதுடையவை என்றும், அவற்றின் வயிற்றில் உணவு பொருட்கள் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே உணவு பற்றாக்குறை காரணமாக பென்குவின்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் பில்லியனர்கள் சங்கத்தில் இணைந்தார் ஷாருக்கான்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இணைந்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஷாருக்கானின் செல்வம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (£1.03 பில்லியன்) என...

AI-யால் கோடீஸ்வரர்களான சகோதரர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட கணினி நிறுவனமான Iren, AI-குறிப்பிட்ட கணினி சேவையகங்களை வாடகைக்கு எடுத்ததன் மூலம் அதன் மதிப்பை $19 பில்லியனாக உயர்த்தியுள்ளது. Iren என்று அழைக்கப்படும்...

மெல்பேர்ண் ரயில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

தடம் புரண்ட மெல்பேர்ண் ரயில், சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களில் இயங்கி வந்ததாக முதற்கட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜூலை மாதம் மெல்பேர்ணின் Clifton Hill நிலையத்தை நெருங்கும்...

டிரம்பிற்கு பயந்து பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைதி முன்மொழிவின்படி, உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் 72 மணி...

நீண்ட விடுமுறை நாட்களில் பல்பொருள் அங்காடி திறக்கும் நேரம்

இந்த வார இறுதியில் பொது விடுமுறை நாட்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு முக்கிய பல்பொருள் அங்காடிகளின் மூடல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, NSW, ACT மற்றும்...

கனடாவில் திரையரங்குகளுக்கு தீ வைத்து இந்திய திரைப்படங்கள் திரையிட எதிர்ப்பு

கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காந்தாரா chapter - 1 உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை திரையிடுவது உடனடியாக...