NewsRobodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

Robodebt அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற முயற்சிப்பதாக மோரிசன் குற்றச்சாட்டு

-

ரோபோடெப்ட் கமிஷன் அறிக்கை மூலம் அரசியல் ஆதாயம் பெற தொழிற்கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றம் சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சராக தாம் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் முற்றாக நிராகரிக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் மொரிசன் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக ரோபோடெப்ட் ஆணைக்குழுவின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய முன்னாள் பிரதமர், நிதி துஷ்பிரயோகம் தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக தெரிவித்தார்.

இந்த 57 பக்க அறிக்கையை வெளியிட்ட ஆணையம், ரோபோடெப்ட் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...