Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி சிறுவனுக்கு கத்திக்குத்து

-

அவுஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் ஒருவனின் பிறந்தநாளில் மர்ம கும்பல் ஒன்று அவனிடம் கொள்ளையடித்து விட்டு கத்தியால் தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 16 வயதுடைய இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தன்னுடைய பிறந்தநாளில் இரண்டு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்த போது மர்ம கும்பலால் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியான் சிங் (Rhyan Singh) என்ற சிறுவன் வியாழக்கிழமை அன்று டார்னிட் நகரில் 2 நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்த போது கைதியுடன் மர்ம கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்துள்ளது.

7 முதல் 8 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுவர்களிடம் இருக்கும் மொபைல் போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ரியான் அணிந்து இருந்த புதிய நைக் ஏர் ஜோர்டன் ஸ்நீக்கர்ஸ் ஷீ-வையும் பிடிங்கியுள்ளனர்.

பிறந்த நாள் பரிசாக ரியானுக்கு கிடைத்து இருந்த ஷீவை பறித்து கொண்டதுடன், குடும்பத்துடன் பிறந்தநாள் விருந்துக்கு செல்வதற்கு முன்பு ரியானின் நெஞ்சு எலும்பு பகுதி, கைகள், முதுகு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளனர், மேலும் தலையிலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பல காயங்களுடன் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம கும்பலை பிடிப்பதற்காக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...