Cinema3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட...

3 நாட்களில் 1500 கோடி வசூலித்து பொக்ஸ் ஒபிசை தெரிக்க விட்ட தென்னிந்திய திரைப்படங்கள்

-

தமிழில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ ராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதுமே சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது.

அதே போன்று தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் போலா ஷங்கர் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. ஹிந்தியில் கடார் 2, ஓஎம்ஜி 2 ஆகிய படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.

கடந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மூலமாக இந்திய அளவில் ரூ.390 கோடிக்கும் (1513 கோடி இலங்கை ரூபா) அதிகமாக வசூலித்துள்ளதாக இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதாவது ஜெயிலர், கடார் 2, ஓம்ஜி2 மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்கள் இணைந்து பொக்ஸ் உபிஸ் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஒஃப் இந்தியா மற்றும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா முழுவதும் ரூ.390 கோடிக்கும் அதிகமான வசூல். வார இறுதியில் இந்தியா முழுவதும் 2.10 கோடிக்கும் அதிகமான பேர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளனர்.

நமது சினிமா வரலாற்றில் கடந்த 100 வருடத்தில் இது போன்று வார இறுதி வசூலினை பார்த்ததில்லை. மேலும் கடந்த 10 வருடத்தில் இவ்வளவு அதிகமான நபர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொமர்ஷியல் சினிமா மக்களிடம் சரியாக சென்றுள்ளதை இந்த பொக்ஸ் ஒபிஸ் வசூல் விவரங்கள் தெரிவிகின்றன. காலை காட்சிகள் கூட முழுவதுமாக நிரம்புகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் கொமர்சியல் சினிமாவை விரும்புவர்களுக்கு சிறப்பான வாரமாக அமைந்துள்ளது. புதிய பாய்ச்சலுடன் சினிமா இயங்குவது மகிச்சியளிக்கிறது. சினிமா கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மிக்க நன்றி” எனக் கூறியுள்ளார்கள்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...