News7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாதி

7 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாதி

-

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் வைத்தியசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரிப்பு தொடர்பான முறைபாடின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை ஆரம்பித்தனர்.அப்போது அந்த வைத்தியசாலையில் லூசி லெட்பி என்ற தாதி, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது.

இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் நான் ஒரு பாவி, இதற்கு நான்தான் காரணம் இன்று உங்கள் பிறந்த நாள். நீங்கள் இங்கு இல்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் போன்ற வாசகங்களை எழுதியிருந்தார்.

இதையடுத்து தாதியர் லூசி லெட்பி 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. அப்போது நோய் வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், இரப்பை குழாயில் காற்றை செலுத்தியும் அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக குற்றச்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அரசு தரப்பு சட்டத்தரணி தெரிவிக்கையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு லூசி லெட்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய சூழலில் அவர் குழந்தைகளுக்கு தீங்கு விளைவித்தார். ஒவ்வொரு குழந்தையும் பாதிக்கப்பட்ட போது லூசி லெட்பி, பணியில் இருந்ததை கவனித்த சக ஊழியர்கள் கவலைகளை தெரிவித்தனர் என வாதிட்டார்.

ஆனால் இதை லூசி லெட்பி மறுத்தார். அவரது தரப்பு சட்டத்தரணி கூறும்போது, லூசி ஒரு அப்பாவி. குழந்தைகள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் அது போன்ற வாசகங்களை எழுதியதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளில் 7 குழந்தைகளை கொன்றது, 6 குழந்தைகளை கொல்ல முயன்றது ஆகியவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

லூசி லெட்பி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகின்ற 21 ஆம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் லூசி லெட்பிக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...