Newsஇந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்த சீனா

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்தை கேலி செய்த சீனா

-

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் அரிய காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்துள்ளது. இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மிகவும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.

ஆனால் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ், இந்தியாவின் விண்வெளி திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு சந்திரயான் திட்டத்தை கேலி செய்துள்ளது.

குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது. 2010 இல் சாங்இ-2 ஏவப்பட்டதில் இருந்து, சீனா ஒரு ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியுள்ளது.

ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் காரணமாக இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை. சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பம் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது.

சீனா பயன்படுத்தும் எரிபொருள் மிகவும் மேம்பட்டது. சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது, இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் நிலவில் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும். நிலவு இரவை தாக்குபிடிக்க முடியாது (ஒரு சந்திர நாள் என்பது 14 பூமி நாட்களுக்கு சமம்.) இதற்கு மாறாக, சீனாவின் யுடு-2 ரோவர் நிலவின் மேற்பரப்புக்கு அருகில் உள்ளது.

நீண்ட காலம் பணிபுரிந்த சாதனையை இது கொண்டுள்ளது. ஏனென்றால், அது அணுசக்தியுடன் கூடியது, அதனால் அது நீண்ட நேரம் செயல்படும். இந்தியாவும் சீனாவும் விண்வெளித் துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் விண்வெளித் திட்டத்துடன் ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் சீனா திறந்திருக்கும் என்றும் அந்த குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதை குளோபல் டைம்ஸ் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

சதுரங்க ஜாம்பவானை தோற்கடித்த பத்து வயது சிறுமி

பிரிட்டனைச் சேர்ந்த 10 வயது போதனா சிவானந்தன் (Bodhana Sivanandan), கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த இளைய சதுரங்க வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2025 பிரிட்டிஷ் சதுரங்க சாம்பியன்ஷிப்பின்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...