NewsNSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

NSW – குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு Cyclone – காட்டுத்தீ எச்சரிக்கைகள்

-

2018 ஆம் ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு மிக அதிகமான காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில வாரங்களில் தெற்கு குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் தினசரி வெப்பநிலை 33 டிகிரியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மின்னல் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய சூறாவளி நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அம்மாநில மக்களை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த நேரத்தில், நியூ சவுத் வேல்ஸ் 14,000 க்கும் மேற்பட்ட புயல் தொடர்பான பேரழிவுகளை சந்தித்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இயற்கை பேரிடர் அபாயம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சூறாவளி மட்டுமல்லாது வெள்ள அபாயமும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...