Breaking Newsஇலங்கையில் இருந்து வரும் பல மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து வரும் பல மாணவர் விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா

-

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழக செமஸ்டருக்காக இலங்கையிலுள்ள சர்வதேச மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பெருமளவிலான புதிய மாணவர் வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிப்ரவரி 2023 இல் தொடங்கிய பல்கலைக்கழக செமஸ்டருடன் ஒப்பிடும்போது இந்த மாணவர் விசா நிராகரிப்பு கணிசமாக அதிக சதவீதத்தை எடுத்துள்ளது என்று விசா ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாணவர் வீசா விண்ணப்பதாரர்கள் தாம் தெரிவு செய்த பாடத்திட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என உரிய முறையில் விளக்கமளிக்கவில்லை என உரிய விசா அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசா ஆலோசகர்கள் சர்வதேச மாணவர்களுக்கு மாணவர் விசா விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்ப வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்கள்.

Latest news

சரிவு நிலையில் உள்ள ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பியர் வணிகம்

ஆஸ்திரேலியாவின் வேகமாக வளர்ந்து வரும் கைவினை பியர் வணிகங்களில் ஒன்றான Fox Friday, நிர்வாக மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது மூன்று மாநிலங்களில் செயல்பாடுகளில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத்...

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...