Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...