Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...