Newsசிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

சிட்னியில் 14 பிள்ளைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்து கொடூர சித்திரவதை!

-

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் சொந்த பிள்ளைகள் 14 பேர்களை குடியிருப்புக்குள் பூட்டி வைத்து கொடூர சித்ரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் தாயாரும் தந்தையும்.

குறித்த இருவர் மீதும் மொத்தமாக 60 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குழந்தைகள் சாட்டையால் அடித்தும் கொடூரமாக தாக்கியும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் சில நேரங்களில் செல்லப்பிராணிகளுக்கு அளிக்கப்படும் தரமற்ற உணவு வகைகளை பிள்ளைகளுக்கும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த 44 வயது தாயார் மீது வீட்டை அழித்து சேதப்படுத்தியதாகவும், தமது பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்தும், அதை மறைத்து, பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த தந்தை அரேபிய மொழி பேசும் நாட்டவர் என்றும், தற்போது 56 வயதாகும் அவர் சொந்த நாட்டில் கட்டாய ராணுவ சேவைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியவர் எனவும், அப்படியான நடவடிக்கையானது அந்த காலகட்டத்தில் மரண தண்டனைக்கு நிகரான குற்றமாகும்.

இந்த நிலையில் சில காலம் தடுப்புக்காவலில் இருந்த அந்த நபர், அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து பிரித்தானிய வம்சாவளி அவுஸ்திரேலிய பெண்ணை மணந்தார், இவர் பின்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார்.

இந்த இருவருமே தங்கள் குடும்பத்தை கொடூரமான நிலைமையில் வைத்திருந்தனர். அந்த தந்தை சலவை இயந்திரங்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார் எனவும், தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பதை அவர் ஆதரித்தும் வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

தற்போது அந்த பிள்ளைகள் அனைவரும் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், இவர்களில் இரண்டு மூத்த பெண்கள் தங்கள் பெற்றோர் தொடர்பில் பதிவு செய்த துஸ்பிரயோக காணொளி ஒன்றை அதிகாரிகளுக்கு ரகசியமாக அனுப்பி வைத்ததை அடுத்தே இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

Latest news

iPhone மாடலுக்கு அவசரகால புதுப்பிப்பை அறிவித்துள்ள Apple நிறுவனம்

சில Apple மொபைல் போன்களில் அவசர சேவைகளுடன் இணைப்பதில் சிக்கல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் Samsung மொபைல் போன்கள் ஆஸ்திரேலியாவின் Triple...

போராட்டங்களின் போது Capsicum spray தெளிப்பது சட்டவிரோதம் – நீதிமன்ற தீர்ப்பு

அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் Capsicum spray பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு...

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

மெல்பேர்ண் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள்

மெல்பேர்ணின் வடமேற்கில் உள்ள Brookfield பகுதியில் உள்ள ஒரு பழைய வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரு சிறு...