Brisbane6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் அதிகரித்துள்ள வெப்பநிலை

6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் அதிகரித்துள்ள வெப்பநிலை

-

6 மாதங்களுக்குப் பிறகு பிரிஸ்பேனில் இன்று அதிக வெப்பமான நாளாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கோல்ட் கோஸ்ட்டில் வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், டவுன்ஸ்வில்லில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், சன்ஷைன் மற்றும் டூவூம்பாவில் கடலோர வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு பிரிஸ்பேனில் அதிக வெப்பமான நாள் கடந்த பிப்ரவரியில் பதிவானது, இது 35.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இருப்பினும், பிரிஸ்பேனில் செப்டம்பர் மாத சராசரி வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காலநிலை காரணமாக எதிர்காலத்தில் வறண்ட மற்றும் வெப்பமான காலநிலையை நாடு எதிர்கொள்ளக்கூடும் என வானிலை திணைக்களம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

சில பகுதிகளில் காட்டுத் தீ அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குயின்ஸ்லாந்தின் வனப்பகுதிகளில் தீயை அணைக்கும் பணிகளை பேரிடர் திணைக்களம் ஆரம்பித்துள்ள போதிலும், நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக அந்த நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Latest news

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

எதிர்காலத்தில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்

எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களுக்கு உலகம் தயாராக வேண்டும் என்று பூகம்ப நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் விக்டோரியன் துணைத் தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சியின் துணைத் தலைவர் Sam Groth அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா...

ஹோட்டலில் இறந்து கிடந்த பிரபல நடிகரின் மகள்

புத்தாண்டு தினத்தன்று சான் பிரான்சிஸ்கோவின் Fairmont ஹோட்டலில் இறந்து கிடந்த பெண், நடிகர் Tommy Lee Jones-இன் மகள் விக்டோரியா ஜோன்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக...