Breaking Newsஅவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகள் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

-

அவுஸ்திரேலியாவில் தேசிய பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவிகளை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது இளைஞர் ஒருவர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த 24 வயதுடைய இளைஞர் 2 மாணவிகள் உள்பட 3 பேரை கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தாக்குதல் சம்பவம் குறித்து குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவர் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest news

சிறந்த விமானக் குழுவிற்கான முதல் இடம் ஆஸ்திரியாவுக்கு செல்கிறது

ஐரோப்பாவின் சிறந்த விமானக் குழு தரவரிசையில் ஆஸ்திரியாவின் விமானப் பணியாளர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை 2023 ஆம் ஆண்டிற்கான செய்யப்பட்டது மற்றும் ஏர் பிரான்ஸ்...

உங்கள் வீட்டில் கல்நார் இருந்தால் அவதானமாக இருங்கள்

நாட்டில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் கல்நார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிற்கும் கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்நார் ஒழிப்பு கவுன்சிலின்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...