Newsஆறு மாத கைக் குழந்தையை கடித்துக் குதறிய எலிகள் - அதிர்ச்சியில்...

ஆறு மாத கைக் குழந்தையை கடித்துக் குதறிய எலிகள் – அதிர்ச்சியில் பெற்றோர்

-

ஆறு மாதங்களேயான கைக்குழந்தையை எலிகள் கடித்து குதறியதில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, குழந்தையின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் இவர்களுடன் வசித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார்.

இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்தபோது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான்.

வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தன. அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது.

அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்ததுடன், காயங்களுக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரியவந்தது.

வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் பொலிஸார் கைது செய்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள ஏனைய இரு குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Latest news

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

டிரம்பின் கொள்கைகளால் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய நுகர்வோர் எடுத்துள்ள அதிரடி முடிவு

பல ஆஸ்திரேலிய நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கட்டணங்களே என்று...

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரிட்டிஷ் ராப்பர் மீது குற்றம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் பிரிட்டிஷ் ராப்பர் மீது மேலும் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. "Yung Filly" என்றும் அழைக்கப்படும்...

டிரம்பின் கொள்கைகளால் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய நுகர்வோர் எடுத்துள்ள அதிரடி முடிவு

பல ஆஸ்திரேலிய நுகர்வோர் அமெரிக்க பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கட்டணங்களே என்று...

ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரிட்டிஷ் ராப்பர் மீது குற்றம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் பிரிட்டிஷ் ராப்பர் மீது மேலும் தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. "Yung Filly" என்றும் அழைக்கப்படும்...