Newsஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கடித்துக் குதறிய செல்லப்பிராணிகள்!

ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கடித்துக் குதறிய செல்லப்பிராணிகள்!

-

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணொருவர் தனது செல்லப்பிராணிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பெர்த் நகரைச் சேர்ந்த இளம்பெண் நிகிதா பில் (31). இவர் Rottweiler இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

அவற்றுக்கு ஹார்லெம், ஃபோர், செவென் மற்றும் பிராங்க்ஸ் என பெயரிட்டார். இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி நிகிதா தனது நாய்களால் தாக்கப்பட்டார். இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில் பொலிஸார் அங்கு விரைந்தனர். பின்னர் நிகிதா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு நிகிதாவிற்கு 5 அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அன்றைய தினம் ஒரு நாய்க்கு அவர் பல் துலக்கிவிடாததால், கோரைன் பாக்டீரியா தொற்று அவருக்கு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு தீவிரமான சிக்கல்கள் உருவாகியிருப்பதாக தெரிவித்த குடும்பத்தினர், நிகிதா ஒரு போராளி அவர் மீண்டு வருவார் என கூறியுள்ளனர். 

இதற்கிடையில், பிராங்க்ஸ் நாயை டெஸர் முறையில் மருத்துவர் பிடிக்கும் முயற்சி தோல்வியுற்றதால், பொலிஸார் அதனை சுட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நாய்கள் தங்கள் உரிமையாளரான நிகிதாவை தாக்க தூண்டியது எது என்பது தெளிவாக தெரியவில்லை.  

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...