Melbourneமெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

மெல்போர்ன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் குழுவின் அறிக்கை வெளியானது

-

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின.

பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி தற்போது 15 பரிந்துரைகள் அடங்கிய குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விக்டோரியா மாநிலம் முழுவதும் புதிய குழாய்கள் அமைப்பது தொடர்பான புதிய மாதிரியும் உரிய பரிந்துரைகளுக்கு இணங்க முன்வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்மூலம் பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் முன் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

06 மணித்தியாலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில், சரியான தகவல் பரிமாற்றத்தை முறைப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பழைய குழாய் அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...