Canberraபைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

பைலட் தாத்தாவுடன் விமானத்தில் பரந்த 3 பேரக்குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

-

அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கான்பெர்ரா நகரில் இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் குயின் பெயான் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் இருந்த விமானி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

Cirrus SR 22 இலகுரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் கான் பெர்ராவில் இருந்து புறப்பட்டு, சிட்னியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் பெயன் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து அவுஸ்திரேலிய விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விமான விபத்தில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான விமானி, விமானத்தில் இருந்த மூன்று குழந்தைகளின் தாத்தா 65 வயதான பீட்டர் நால்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குழந்தைகள் 11, 9 மற்றும் 6 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...