Newsசிட்னி பாலஸ்தீன பேரணிக்கு சென்ற அனைவரையும் நாடு கடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர்...

சிட்னி பாலஸ்தீன பேரணிக்கு சென்ற அனைவரையும் நாடு கடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

-

சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய தேசியக் கொடியை எரிப்பது போன்ற பல பயங்கரமான செயல்கள் இடம்பெற்றுள்ளமை ஆபத்தான நிலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் குறித்து தொழிற்கட்சி அரசாங்கமும், பிரதமர் அந்தோனி அல்பனீஸும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தற்காலிக விசாவில் உள்ள அனைவரின் விசாக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் இனவெறிக்கு இடமளிக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

இதேவேளை, சிட்னியில் பயணித்த காரில் இஸ்ரேல் கொடியை காட்டிய 04 இளைஞர்களை வாய்மொழியாக அச்சுறுத்திய நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...