Newsகாசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

காசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

-

எகிப்தை சேர்ந்த மக்கள் எல்லை கடந்து வந்து காசா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவியதாக தெரிவித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

வடக்கு காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருக்கலாம் என கருதுவதால், அங்கு தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.இதற்காக குறித்த பகுதியில் மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் மக்கள் கூட்டம் கூட்டமாக பைகளை சுமந்தபடி செல்வது பதிவாகியுள்ளது.

இவர்கள் பலஸ்தீனத்திற்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வழங்குவதற்காக பலஸ்தீன எல்லையை கடக்கும் எகிப்தியர்கள் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அந்த வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

குறித்த வீடியோவை பார்த்தவர்கள், மக்கள் படும் துயரம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர், போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். சிலர் அந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து கூகுள் மூலம் ஆய்வு செய்யப்பட்டத்தில், அந்த வீடியோவானது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.

எகிப்து-லிபியா எல்லையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தலைப்புடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக அப்துல்காதர் ஆசாத் என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் 7 ஆம் திகதி இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

அதில், நூற்றுக்கணக்கான எகிப்தியர்கள் எல்லை வழியாக லிபியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதாக தெரிவித்திருந்தார்.

எனவே, தற்போது பரவி வரும் வீடியோவுக்கும், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

சிட்னி புத்தாண்டு வாணவேடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. 2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...