Newsகாசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

காசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

-

எகிப்தை சேர்ந்த மக்கள் எல்லை கடந்து வந்து காசா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவியதாக தெரிவித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

வடக்கு காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருக்கலாம் என கருதுவதால், அங்கு தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.இதற்காக குறித்த பகுதியில் மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் மக்கள் கூட்டம் கூட்டமாக பைகளை சுமந்தபடி செல்வது பதிவாகியுள்ளது.

இவர்கள் பலஸ்தீனத்திற்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வழங்குவதற்காக பலஸ்தீன எல்லையை கடக்கும் எகிப்தியர்கள் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அந்த வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

குறித்த வீடியோவை பார்த்தவர்கள், மக்கள் படும் துயரம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர், போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். சிலர் அந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து கூகுள் மூலம் ஆய்வு செய்யப்பட்டத்தில், அந்த வீடியோவானது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.

எகிப்து-லிபியா எல்லையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தலைப்புடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக அப்துல்காதர் ஆசாத் என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் 7 ஆம் திகதி இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

அதில், நூற்றுக்கணக்கான எகிப்தியர்கள் எல்லை வழியாக லிபியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதாக தெரிவித்திருந்தார்.

எனவே, தற்போது பரவி வரும் வீடியோவுக்கும், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

NSW ஹண்டர் பகுதியில் இறந்து கிடந்த பெண் – ஒருவர் கைது

NSW Hunter பகுதியில் நடந்ததாகக் கூறப்படும் குடும்ப வன்முறை கொலையில் 20 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.45 மணியளவில் தாக்குதல் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் வீட்டிற்கு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்பட்ட பல சீஸ் பிராண்டுகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய கடைகளில் விற்கப்படும் பல பிராண்டு சீஸ்கள் பாக்டீரியா மாசுபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்குக் காரணம் சீஸில் லிஸ்டீரியா வைரஸ் பரவுவதே என்று ஆஸ்திரேலிய...

சர்ச்சைக்குரிய பேச்சால் இஸ்ரேலிய அமைச்சரின் ஆஸ்திரேலிய விசா ரத்து

காசா பகுதியில் உள்ள குழந்தைகளை எதிரிகள் என்று அழைத்த இஸ்ரேலிய அரசியல்வாதி Simcha Rothman, நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள யூத சமூகத்தினருடன் ஒரு...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

மெல்பேர்ணில் திருடப்பட்ட $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari கார் குறித்து விசாரணை

மெல்பேர்ண் வீட்டில் இருந்து 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள Ferrari உட்பட நான்கு சொகுசு கார்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை...