Sportsஇங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி - உலக கிண்ண...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் ஆப்கான் அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் ஆகிய அணிகள் மோதின.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ஓட்டங்களையும், இக்ராம் அலிகில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் 42 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

285 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 40.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அணிசார்பில், அதிகபடியாக ஹாரி புரூக் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், ஆப்கான் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 51 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

குறித்த இந்த வெற்றியினால் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு சம்பியன் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. உலகக் கிண்ண தொடரில் 8 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி பெற்றுள்ளது.

உலக கிண்ண தொடரின் புள்ளிப்பட்டியல்

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...