Newsகாதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

-

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர் உயிரை இழந்துள்ளார்.

சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளார்.

ஆனால் Netta Epstein, அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார். இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் Netta Epstein இன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்னொரு பகுதியில் ஒழிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் இராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.

Latest news

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

ஆட்சேர்ப்பை தொடங்கியுள்ள நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஏனைய மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த 1500 அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பிரச்சாரம்...

புற்றுநோயை வென்ற ஆஸ்திரேலிய மருத்துவர்

புற்றுநோய் அபாயத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரைப் பற்றிய செய்தியை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குணப்படுத்த முடியாத கிளியோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

மெல்போர்னில் உள்ள மற்றொரு பள்ளி மாணவிகள் மீது அவதூறான வார்த்தைகள் பயன்படுத்திய சம்பவம்

மெல்போர்னில் உள்ள பள்ளி ஒன்றில் பெண்கள் கழிப்பறையில் மாணவிகளை குறிவைத்து ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்ட சம்பவம் மீண்டும் பதிவாகி வருகிறது. மெல்போர்னைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து 7...