Newsகாதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

காதலியை காப்பாற்ற ஹமாஸ் படைகளிடம் சிக்கிய கனேடியர்

-

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்ட இளைஞரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் போது காதலியை காப்பாற்றுவதற்காக குறித்த கனேடிய இளைஞர் உயிரை இழந்துள்ளார்.

சம்பவத்தின் போது 21 வயதான Netta Epstein மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் Kfar Aza, kibbutz பகுதியில் பாதுகாப்பான அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

அப்போதே ஹமாஸ் துப்பாக்கிதாரி ஒருவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அந்த ஹமாஸ் ஆயுததாரி இவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளதுடன் கையெறி குண்டு ஒன்றை இவர்கள் மீது வீசியுள்ளார்.

ஆனால் Netta Epstein, அந்த தாக்குதலில் இருந்து தமது காதலியை காப்பாற்றும் நோக்கில், அந்த கையெறி குண்டை தமது உடம்பில் வாங்கியுள்ளார். இதில் Irene Shavit என்ற அந்த இளம்பெண் உயிர் தப்பியதுடன், பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் Netta Epstein இன் தாயார், அங்குள்ள மக்கள் மீது ஹமாஸ் முன்னெடுத்துள்ள தாக்குதல் என்பது உண்மையில் படுகொலை என குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி தாமும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், ஆனால் இன்னொரு பகுதியில் ஒழிந்துகொண்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் kibbutz பகுதியில் அன்றைய தினம் கொல்லப்பட்ட 70 பேர்களில் தமது தாயாரும், மகனும், இரு உறவினர்களும் சிக்கிக்கொண்டனர் எனவும் உறவினர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் இஸ்ரேலில் பிறந்தாலும், அவரது பாட்டி காரணமாக கனேடிய குடியுரிமையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் Netta Epstein இஸ்ரேல் இராணுவத்தில் சேவையாற்றியும் வந்துள்ளார்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...