Cinemaநடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

நடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

-

நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துவருகிறது.

இந்த நிலையில் நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் தெரிவித்துள்ளார். அதன்படி “நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.

அந்தந்த படங்களில் நான் நடித்ததற்காக கிடைத்த சம்பளத்தை துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கவும், ரிலீஸ் செய்யவும் பயன்படுத்தினேன். அதேபோல சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கும்படி இதுவரை நான் யாரையும் கேட்கவில்லை. எத்தனையோ பட வாய்ப்புகளை நிராகரித்தும் இருக்கிறேன்” என்றுள்ளார்.

தற்போது விஜய்யின் லியோ படத்திலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை பல தடைகளை தாண்டி திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...