Cinemaநடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

நடிகராக மாறியது குறித்து கருத்து வெளியிட்ட கவுதம் மேனன்

-

நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான கவுதம் மேனன் சமீப காலமாக படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பும் கிடைத்துவருகிறது.

இந்த நிலையில் நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் தெரிவித்துள்ளார். அதன்படி “நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.

அந்தந்த படங்களில் நான் நடித்ததற்காக கிடைத்த சம்பளத்தை துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கவும், ரிலீஸ் செய்யவும் பயன்படுத்தினேன். அதேபோல சினிமாவில் வாய்ப்புகள் கொடுக்கும்படி இதுவரை நான் யாரையும் கேட்கவில்லை. எத்தனையோ பட வாய்ப்புகளை நிராகரித்தும் இருக்கிறேன்” என்றுள்ளார்.

தற்போது விஜய்யின் லியோ படத்திலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து பல வருடங்களாக முடங்கி உள்ள துருவ நட்சத்திரம் படத்தை பல தடைகளை தாண்டி திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...