Newsமுடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

முடிவடைந்தது இஸ்ரேலில் இருந்து அவுஸ்திரேலியர்களை மீட்கும் வான்வழிப் பணிகள்

-

45 அவுஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குழுவொன்று காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை எகிப்து ஊடாக வேறு நாட்டுக்கு அழைத்து வர முயற்சிப்பதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 02 விமானங்கள், 194 பயணிகளுடன் நேற்று இரவு டெல் அவிவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றன.

இதேவேளை, தற்போது 03 விமானங்கள் மூலம் டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை விசேட மனிதாபிமான விமானத்தை இயக்குவதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டெல் அவிவில் இருந்து லண்டனுக்கு அழைத்து வரப்பட்ட அவுஸ்திரேலியர்கள் குழுவானது குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மூலம் இன்று சிட்னிக்கு அழைத்து வரப்படவுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...