Breaking Newsஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

ஆஸ்திரேலியாவில் துரித கதியில் பரிசீலிக்கப்படவுள்ள அகதி தஞ்ச விசாக்கள்!

-

ஆஸ்திரேலியாவின் அகதி தஞ்ச விசா பொறிமுறையை வலுப்படுத்த புதிதாக 160 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

அகதி தஞ்சம் கோரி தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதற்கு மிக நீண்ட காலம் எடுப்பதால் இதை பலர் ஆஸ்திரேலியாவில் தாம் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க பயன்படுத்துவதாகவும், உண்மையிலேயே அகதிகள் அல்லாதவர்களிடம் இருந்து போலி விண்ணப்பங்கள் அதிகளவில் கிடைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்பு விசா விண்ணப்பங்களை துரித கதியில் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்பதற்கு 54 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் எனவும், இது உட்பட பல்வேறு நடவடிக்கைகளிக்கென மொத்தம் 160 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

AAT எனப்படும் Administrative Appeals Tribunal-க்கு 10 கூடுதல் நீதிபதிகள் மற்றும் 10 Federal circuit மற்றும் குடும்ப நீதிமன்ற நீதிபதிகள் நியமனமும் இதில் அடங்குகின்றது.

போலியாக அகதி தஞ்ச விண்ணப்பங்களை தாக்கல் செய்து நீண்ட வரிசையில் விண்ணப்பங்கள் தேங்குவதற்கு காரணமாக இருப்பவர்களால் உண்மையான அகதிகள் பெறுமளவில் பாதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார்.

புகழிட கோரிக்கைகளை மேற்கொள்வதற்கான எந்த தகுதியும் இல்லாத விண்ணப்பதாரர்களால் தாக்கல் செய்ய்யப்படும் அகதி தஞ்ச விண்ணப்பங்கள், அவர்கள் ஆஸ்திரேலியாவில் வேலை உரிமைகளை பெறுவதற்கான ஒரு வழியாக பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

போலியாக விசா விண்ணப்பங்களை தாக்கல் செய்துவிட்டு அதற்கான முடிவிற்காக காத்திருக்கும் காலம் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபின் மீளாய்வுக்கு விண்ணப்பித்த பின்னர் கிட்டதட்ட மூன்றரை ஆண்டுகள். அதிலும் நிராகரிக்கப்பட்டபின் நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பித்து அதன் முடிவுக்காக அதிகபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி நேரிடலாம் என்பதால் இதனை பலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேலை ஆஸ்திரேலியாவில் தாக்கல் செய்யப்படும் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் 2021 முதல் கணிசமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...