Newsமொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஹோட்டலை அலறவிட்ட நபர்

மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் ஹோட்டலை அலறவிட்ட நபர்

-

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சென்றுள்ளார்.

36 வயதுடைய அவருக்கு ரஷ்ய மொழிதான் பேசத் தெரியும். ஹோட்டலில் தனக்கான உணவு ஒன்றை வாங்க முயற்சிக்கும் போது அவருக்கு அந்த இடத்தின் மொழியான போர்ச்சுகீஸ் மொழி தெரியாததால் மொழிபெயர்ப்பு செயலியை

பயன்படுத்தியிருக்கிறார்.

அந்த ஹோட்டலில் மாதுளை பழச்சாறு ஓர்டர் செய்ய விரும்பியிருக்கிறார். இதற்காக மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தியபோது மாதுளை பழச்சாறுக்கு பதிலாக, அதன் ஆங்கில வார்த்தையான pomegranate-ஐ தவறாக மொழிபெயர்த்து வழங்க, இறுதியில் grenade (கையெறி குண்டு) என்று ஒர்டர் செய்துவிட்டார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வெயிட்டர், கையெறி குண்டு வைத்து மிரட்டுவதாக நினைத்து பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதைதொடர்ந்து ,பொலிஸ் அதிகாரிகள் விரைந்து வந்து சுற்றுலா பயணியை கைது செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரிடமோ, அவர் தங்கியிருந்த அறையிலோ எந்த ஒரு ஆயுதமும் இல்லை. எனவே, அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் ஹோட்டல் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹோட்டலில் சோதனை செய்வதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற முயன்றதால் அவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...